நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு செலக்டிவ் ஆன படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தி கிரேட் பாதர் என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தவர், தற்போது மீண்டும் மலையாளத்தில், மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அமலாபால் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி மற்ற இரு கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடித்தது குறித்து சினேகா கூறும்போது, “இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.. என்ன விதமான கதாபாத்திரம் என என்னால் இப்போது சொல்ல முடியாவிட்டாலும் இரண்டுவித காலகட்டத்தில் இரண்டுவிதமான தோற்றங்களில் நடிக்கிறேன் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும். ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பி வரவேண்டும் என்று நான் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் மூலமாக என்னை தேடி வந்தபோது மறுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.