ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பாக இந்தப் படம் தேர்வு செய்யப்படும் என்று தெலுங்குத் திரையுலகினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படம் தேர்வு செய்யப்பட்டது.
இருப்பினும் ஆஸ்கர் விருதுக்கு நேரடியாகப் போட்டியில் இறங்கியுள்ளது 'ஆர்ஆர்ஆர்'. பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் படக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் போட்டியில் குதிக்கிறார்கள். இத்தனை பிரிவுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் போட்டியிடுவதை பலரும் கிண்டலடித்து வருகிறார்கள். அதிலும் படத்தில் 'ஐந்து நிமிடமே வந்த ஆலியா பட்' சிறந்த துணை நடிகைக்கான விருதுகளுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளதை ரசிகர்கள் அதிகமாக விமர்சித்து வருகிறார்கள்.
படத்தில் வெள்ளைக்காரனை வில்லனாகக் காட்டிவிட்டு, அவனிடமே விருதுகளுக்காக போய் நிற்பதா என்றும் சிலர் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளார்கள். தமிழில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தை தெலுங்கு ஊடகங்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது தெலுங்குப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் பயங்கரமாக கிண்டலடித்து வருகிறார்கள். “ஆஸ்கர் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்'' என்ற தலைப்பிலான மீம்ஸ்கள் நேற்று முதல் அதிகமாகப் பரவி வருகிறது.