நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பாக இந்தப் படம் தேர்வு செய்யப்படும் என்று தெலுங்குத் திரையுலகினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படம் தேர்வு செய்யப்பட்டது.
இருப்பினும் ஆஸ்கர் விருதுக்கு நேரடியாகப் போட்டியில் இறங்கியுள்ளது 'ஆர்ஆர்ஆர்'. பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் படக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் போட்டியில் குதிக்கிறார்கள். இத்தனை பிரிவுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் போட்டியிடுவதை பலரும் கிண்டலடித்து வருகிறார்கள். அதிலும் படத்தில் 'ஐந்து நிமிடமே வந்த ஆலியா பட்' சிறந்த துணை நடிகைக்கான விருதுகளுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளதை ரசிகர்கள் அதிகமாக விமர்சித்து வருகிறார்கள்.
படத்தில் வெள்ளைக்காரனை வில்லனாகக் காட்டிவிட்டு, அவனிடமே விருதுகளுக்காக போய் நிற்பதா என்றும் சிலர் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளார்கள். தமிழில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தை தெலுங்கு ஊடகங்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது தெலுங்குப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் பயங்கரமாக கிண்டலடித்து வருகிறார்கள். “ஆஸ்கர் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்'' என்ற தலைப்பிலான மீம்ஸ்கள் நேற்று முதல் அதிகமாகப் பரவி வருகிறது.