ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களின் மூலம் திறமையான குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டவர் நடிகர் கிஷோர் அதன்பிறகு ஹரிதாஸ், போர்க்களம் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கிய கிஷோர், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஒற்றனாக (ஆபத்துதவியாக) வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அதேசமயம் கன்னடத்திலும் இவர் நடித்துள்ள கந்தரா என்கிற படம் அதேநாளில் வெளியாகி வரவேற்பை பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் கிஷோர். இந்த நிலையில் முதன்முறையாக பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ள கிஷோர், சந்திரசேகர் பண்டியப்பா என்பவர் இயக்கும் ரெட் காலர் என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கிஷோர் நடிக்கும் காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட இருக்கின்றன.