பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ |
இயக்குனர் ஆர். கே .செல்வமணி, நடிகை ரோஜா தம்பதியின் மகள் அன்ஷு மாலிகா. இவர் ஆதித்ய வர்மா, மகான் படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் நடிக்க இருக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அது குறித்து இயக்குனர் ஆர் .கே .செல்வமணி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய மகள் அன்ஷு மாலிகா மேற்படிப்பிற்காக தற்போது அமெரிக்கா சென்று இருக்கிறார். இன்னும் நான்கு ஆண்டுகள் அவர் அங்கு தான் இருப்பார். அதனால் அவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி. அதன் பிறகு வேண்டுமானால் ஒருவேளை அவர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆர்.கே. செல்வமணி.