ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமான 'விக்ரம் வேதா' அதே இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இயக்க ஹிந்தியில், ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்க ரீமேக் ஆகி கடந்த வாரம் வெளியானது.
படத்தைப் பார்த்த பல விமர்சகர்களும் படத்தை ஆஹா, ஓஹோவெனப் பாராட்டினார். 5க்கு 4 ரேட்டிங் எல்லாம் கொடுத்தார்கள். ஆனாலும், படத்தின் வசூல் விமர்சனங்களின் பாராட்டுக்களுக்கு ஏற்றபடி அமையாதது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் வார இறுதியில் இப்படம் சுமார் 40 கோடி வரை வசூலித்துள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் 11 கோடி, இரண்டாம் நாளில் 13 கோடி, மூன்றாம் நாளில் 15 கோடி வரை வசூலித்துள்ளதாம். இவ்வளவு குறைவான வசூல் இப்படத்திற்குக் கிடைக்கும் என பாலிவுட்டில் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். நவராத்திரி பூஜையால் குடும்பத்தினர் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருப்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.