நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு மீண்டும் சினிமாவில் படங்கள் இயக்க போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு அவ்வப்போது தான் சைக்கிளிங், ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருபவர், சில பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .