நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கலர்ஸ் தமிழின் 'திருமணம்' சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் தொடர்ந்து 'சித்தி' சீரியலில் ஹீரோயின் ரோலில் நடித்து வந்தார். தவிர மாடலிங்கில் கலக்கி வந்த ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாலிபர்கள் பலரும் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சித்தி 2 சீரியல் சிலமாதங்களுக்கு முன் நிறைவுற்றது. இதனையடுத்து ப்ரீத்தி ஷர்மாவுக்கு தமிழில் வேறெந்த பிராஜெக்டும் கிடைக்காததால் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு மூட்டை கட்டி சென்றுவிட்டார். இதனால் தமிழகத்தில் அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக உருவாகவுள்ள சீரியலில் அக்னி, தினேஷ், நிவிஷா மற்றும் ராதிகா ப்ரீத்தி ஆகியோர் மெயின் ரோல்களில் நடிக்க இருந்தனர். தற்போது அந்த தொடரிலிருந்து ராதிகா ப்ரீத்தி விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக ப்ரீத்தி ஷர்மா என்ட்ரி கொடுக்க உள்ளார். ப்ரீத்தி ஷர்மா இந்த தொடரில் அக்னிக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியானது ப்ரீத்தி ஷர்மா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சீரியல் குறித்த அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.