நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இந்த படம் 5 தேசிய விருதுகளை வென்றது. டில்லியில் நேற்று நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் சூர்யா. இதேப்போல் நாயகி அபர்ணா பாலமுரளி, இயக்குனர் சுதா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் விருதுகளை பெற்றனர். சிறந்த படத்திற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான 2டி நிறுவனத்தின் ஜோதிகாவும் விருது வென்றார்.
பாரம்பரிய உடையில் இவர்கள் அனைவரும் விழாவிற்கு வந்து விருதுகளை பெற்றனர். சூர்யாவிற்கு முதல் தேசிய விருது என்பதால் சூர்யாவின் அப்பா சிவகுமார், அம்மா லக்ஷமி ஆகியோரும், சூர்யாவின் குழந்தைகளும் பங்கேற்றனர். பெற்றோர்கள் வாங்கிய விருதை ஏந்திய படி தியா, தேவ் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் வைரலாகின. அதோடு சூர்யா விருது பெற்றபோது ஜோதிகாவும், ஜோதிகா விருது பெற்றபோது சூர்யாவும் போனில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
தேசிய விருது பெற்ற கையோடு தனது குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சூர்யா, ‛‛சுதாவிற்கு என்றென்றும் நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த விருது எனது அன்பான ரசிகர்களுக்காக...'' என பதிவிட்டுள்ளார்.