முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிய படம் தேஜாவு. இதில் அருள்நிதி, ஸ்ருதி வெங்கட், மதுமிதா, நடிகர்கள் அச்யுத் குமார், காளி வெங்கட் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஒருவர் கற்பனையாக எழுதும் அனைத்து சம்பவங்களும் யதார்த்த வாழ்வில் நிகழ்வதைச் சுற்றி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எழுத்தாளர் சுப்பிரமணியாக நடிகர் அச்யுத் குமார் நடித்துள்ளார். அவர் எழுதும் கற்பனை கதையின் கதாபாத்திரங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்வில் தன்னை வந்து அச்சுறுத்துவதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். அவர் கூறுவதை அங்குள்ள யாரும் நம்பவில்லை.
இந்த நிலையில், கடத்தப்பட்ட ஒரு பெண் தப்பி வந்து காவல் நிலையத்தில், தான் கடத்தப்பட்டதில் எழுத்தாளர் சுப்பிரமணிக்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுகிறார். அப்போது, போலீஸ் அதிகாரி மதுமிதா மகள் ஸ்ம்ருதி வெங்கட் கடத்தப்படுகிறார். அவளை கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரி விக்ரம் குமாராக நடிகர் அருள்நிதி வருகிறார். சுப்ரமணியின் கற்பனை கதை எப்படி யதார்த்த வாழ்வில் உயிர் பெறுகிறது என்பதும் விக்ரம் தனது விசாரணையில் அவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுமே இப்படத்தின் மீதிக் கதையாகும்.
கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் காந்தி ஜெயந்தி சிறப்பு திரைப்படமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.