மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் பெருமையாக இன்று வெளிவந்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் அமைந்துள்ளதாக காலைக் காட்சிகளைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில தெலுங்கு ஊடகங்களும், சில தெலுங்கு ரசிகர்களும் 'பொன்னியின் செல்வன்' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ்வான கமெண்ட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்துடன் 'பொன்னியின் செல்வன்' படத்தை ஒப்பிட்டுப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'பாகுபலி' படம் ஒரு கற்பனைக் கதை, அதை படமாக்குவதற்கு வசதியாக, எளிதாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் படமெடுக்கலாம். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதை 70 வருடங்களுக்கு முன்பு கல்கி எழுத்தில் கற்பனையும், உண்மையும் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுக் கதை. அதை சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றி படமாக்க முடியாது. அந்த வித்தியாசம் கூடத் தெரியாமல் சில தெலுங்கு ரசிகர்கள் பேசி வருவதாக தமிழ் ரசிகர்கள் பதில் கொடுத்து வருகிறார்கள்.
மணிரத்னம் 'பாகுபலி' படம் போல விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை இல்லாமல் நிஜமான இடங்களில் 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்து தன்னை ஒரு சிறந்த கிரியேட்டர் என மீண்டும் நிரூபித்துள்ளதாக தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இன்று காலை முதலே பாகுபலி, ராஜமவுலி என டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பெற்று தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது.