நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' நாளை உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. கல்கி எழுதிய நாவலை படமாக்கியுள்ளதால் இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இப்படம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. அதற்கு சாட்சியாக இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளது.
இந்திய அளவில் முதல் நாள் வசூலில் தென்னிந்தியப் படங்கள்தான் சாதனை படைத்துள்ளன. 'ஆர்ஆர்ஆர், பாகுபலி 2, கேஜிஎப் 2' ஆகிய படங்கள் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. தமிழைப் பொறுத்தவரையில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் 60 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
'பொன்னியின் செல்வன்' படம் முதல் நாள் வசூலாக 50 கோடியைத் தொட வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்நாளில் மட்டும் முன்பதிவு மூலம் கிட்டத்தட்ட இந்தியாவில் மட்டும் ரூ.15 கோடி வரை புக்கிங் நடந்துள்ளதாக தெரிகிறது. முதல்நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.20 முதல் 25 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்தியா தவிர்த்து உலகின் மற்ற நாடுகளில் ஒட்டுமொத்தமாக முதல்நாளில் ரூ.20 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் உள்ளதைப் போல முதல் நாள் வரவேற்பு மற்ற மொழிகளில் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் படம் வெளிவந்த பின்புதான் பார்க்க ஆவலாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்குப் பின் 'பொன்னியின் செல்வன்' படம் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஆனாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் முன்பதிவு திறக்கப்பட்டுள்ள நாட்கள் வரை இப்படத்திற்கான முன்பதிவு 90 சதவீதத்திற்கும் மேல் நடந்துள்ளது என்கிறார்கள். அதனால், தமிழக வசூலில் புதிய சாதனையைப் படைக்கலாம்.