மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கர்நாடகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி திலக்ராஜின் மகன் ஜெயித்கான் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடித்திருக்கும் படம் பனாரஸ். ஜெயதீரா இயக்கி உள்ளார். ஜெயித்கானுக்கு ஜோடியாக சோனல் மாண்டீரா நடித்துள்ளார். இவர் துளு மற்றும் கன்னட மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரின் மகன் தான் ஹீரோ என்பதால் படத்தின் விளம்பரங்களில் ஹீரோ ஜெயித் கான் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். இது குறித்து தனது ஆதங்கத்தை சோனல் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து அவர் பேசியதாவது: இதற்கு முன் 10 படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும் இது என் வாழ்வின் முக்கியமான படம். இவ்வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு என் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன். விளம்பர டிசைன்களில் நாயகன் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவருக்கு இது முதல் படம் என்பதால் அவரை சற்று கூடுதலாக புரமோட் செய்வதில் தவறில்லை. என்றார்.
படத்தின் நாயகன் ஜெயித் கான் பேசியதாவது: நான் அரசியல் குடும்பத்துப் பிள்ளை என்பதால் சினிமாத் துறைக்கு வருவதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அப்பா நான் சினிமாவுக்குள் வருவதை கடுமையாக எதிர்த்தார். அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து கன்வின்ஸ் செய்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். வரும் நவம்பர் 4ம் தேதியன்று கன்னடம், தமிழ்,மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. என்றார்.