Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாஜ்மஹாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் பார்க்கணும் : சரத்குமார்

29 செப், 2022 - 11:00 IST
எழுத்தின் அளவு:
People-who-come-to-see-the-Taj-Mahal,-now-want-to-see-the-great-temple-of-Tanjore-says-Sarathkumar

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் நாளை(செப்., 30) வெளிவருகிறது. இதில் சரத்குமார் நாவலின் முக்கிய கேரக்டரான பெரிய பழுவேட்டரையராக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு :

நான் நடித்துள்ள பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், ஒரு நாட்டின் ராஜாக்கள் மாறலாம், நாட்டின் நலன் மாறக்கூடாது என்று கருதுகிறவன். ஆனால் அவர் விழுந்தது ஒரு பெண்ணிடம். அதுதான் பொன்னியின் செல்வன் கதையின் சாராம்சம். அப்படியொரு முக்கியமான கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன்.

பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி.

சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரியவரும். இனிவரும் காலங்களில் சோழர்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும். இந்தியாவில் தாஜ்மஹாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் வந்து பார்க்க வேண்டும்.

இந்த கேரக்டருக்காக தேர்வு செய்யப்பட்டதும், ஏற்கெனவே நான் நாவலை பலமுறை படித்திருந்தாலும், மணிரத்னம் மிகச் சிறந்த வழிகாட்டுதலை தந்தார். அதனால் சிறப்பாக நடிக்க முடிந்தது. என்றாலும் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க பயம் இருந்தது. அவருடன் காதல் காட்சிகள் இருக்கிறது. தொட்டு நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதனால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது அவர் தவறாக எதுவும் நினைத்து விடுவாரோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் அந்த காட்சிகளில் ஒரு நடிகையாக மட்டும் இருந்தார். உலக அழகி என்ற எண்ணமோ, அமிதாப்பசன் மருமகள் என்ற எண்ணமோ, அபிஷேக் பச்சன் மனைவி என்ற எண்ணமோ அவரிடம் இருக்கவில்லை.

தற்போது 20 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும், குணசித்ரமாகவும் கலந்து நடித்து வருகிறேன். நடிப்புதான் எனக்கு வருமானம் தரும் வேலை, அதில் தீவிர கவனம் செலுத்த இருக்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வனுடன் நானே வருவேன் படத்தை வெளியிடுவது ஏன்?பொன்னியின் செல்வனுடன் நானே வருவேன் ... தமிழில் உருவாகும் ஸ்னூக்கர் படம் தமிழில் உருவாகும் ஸ்னூக்கர் படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

thangam - bangalore,இந்தியா
01 அக், 2022 - 22:09 Report Abuse
thangam என்ன ரம்மி circle இந்த பக்கம்?
Rate this:
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
29 செப், 2022 - 13:46 Report Abuse
Ramu நிச்சயமாக இது நடக்க வேண்டும். எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களின் உடையார் நாவலை படமாக்கினால், தஞ்சை கோவில் பற்றி உலகமெல்லலாம் தெரியவரும். பொன்னியின் செல்வன் கதை, ராஜராஜ சோழன் இளவரசனாக இருந்தபோது நடந்தது. அப்போது பெரியகோவில் கட்டப்படவில்லை.
Rate this:
ravichandran - Hosur,இந்தியா
29 செப், 2022 - 12:32 Report Abuse
ravichandran 1500 ஆண்டுகள் பழமையான உலகிலேயே இன்னும் உபயோகத்தில் உள்ள முதல் கட்டுமானமான கல்லணை பற்றியும் இவர்களெல்லாம் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்,இன்னும் கங்கை கொண்ட சோழபுரம் இரண்டாம் ராஜராஜன் கட்டிய சோளீஸ்வரம் கோயில் பற்றியும் பேசினால் நம் வரலாறை உலகம் தெரிந்து கொள்ளும்.. இந்த வகையில் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in