ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தாயாரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவியுமான இந்திரா தேவி(70) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று(செப்., 29) காலமானார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் மகேஷ்பாபு. இவரது தந்தையான நடிகர் கிருஷ்ணாவும் அந்தக்காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இவரது மனைவியான இந்திரா தேவி கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில தினங்களாக இவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
இந்திராதேவியின் உடல் அஞ்சலிக்காக ஐதராபாத்தில் உள்ள பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இந்திராதேவியின் உடலுக்கு நாகார்ஜூனா, சுகுமார், ராணா, மோகன்பாபு, தமன், விஜய் தேவரகொண்டா, அல்லு அரவிந்த், கொரட்டலா சிவா, பிரபாஸ் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருப்பதுடன் மகேஷ்பாபுவிற்கு ஆறுதல் கூறியும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே பாட்டி இந்திராதேவியின் உடலை பார்த்து மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தேம்பி தேம்பி அழுவதும், அவரை மகேஷ்பாபு தேற்றும் வீடியோவும் வைலரானது.