மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாளத்தில் தனது அறிமுகத்தை துவங்கிய துல்கர் சல்மான் கடந்த 10 வருடங்களில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்து நிலையான இடத்தை பிடித்துள்ளதுடன் தற்போது பாலிவுட்டிலும் தேடப்படும் நபராக மாறியுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது, பல பேட்டிகளில் அவரிடம் கேட்கப்படுவது என்னவென்றால் எப்போது அவரது தந்தை மம்முட்டியுடன் அவர் இணைந்து நடிக்கப் போகிறார் என்பது தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “நான் எப்போதுமே என் தந்தையுடன் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் இன்னும் அவர் பக்கமிருந்து எந்த ஒரு கிரீன் சிக்னலும் வரவில்லை. இப்பொழுதே வெள்ளை முடிகள் எட்டிப்பார்க்கின்ற தாடியை மஸ்காரா போட்டு சமாளித்து வருகிறேன். அவர் அப்படியேதான் இருக்கிறார். இப்போது அவர் இருக்கும் தோற்றத்தைப் பாருங்கள்.. ஒருவேளை அவருக்கு தந்தையாக கூட நான் நடிக்கும் நிலை வந்தாலும் வரலாம்” என்று தந்தையை வியந்து பாராட்டியுள்ளார் துல்கர் சல்மான்