விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், பெரிய அளவில் அறிமுகமில்லாத ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா சண்முகம். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளருடன் கூட்டணி சேர்த்துக்கொண்டு நடிகர் ஆரியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து விமர்சனத்திற்கு ஆளான சம்யுக்தா அதன்மூலமே பிரபலமும் ஆனார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காபி வித் காதல் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துள்ள சம்யுக்தா தெலுங்கில் விஜய் முதன் முதலாக நடித்து வரும் வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும் விஜய்யுடன் நடித்த காட்சிகள் தனக்கு திருப்திகரமாக அமைந்தது என்று கூறியுள்ளார் சம்யுக்தா. படப்பிடிப்பில் விஜய்யுடன் நடித்த பழகிய அனுபவம் குறித்து கூறும்போது விஜய்யின் நடிப்பை, அவரது அர்ப்பணிப்பு உணர்வை நேரில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது அவருடைய குடையை கூட அவரே தான் தன் கையில் வைத்துக்கொண்டு பிடித்துக் கொள்கிறார். அந்த அளவிற்கு அவர் எளிமையான மனிதர். அவரது நடிப்பை இன்னும் படம் வெளியாவதற்கு முன்பே பார்த்து ரசித்த முதல் ஆள் என்பதால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று விஜய் பற்றி பிரமித்து கூறியுள்ளார் சம்யுக்தா.