ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சண்டைக்கோழி, லத்தி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விஷால், 45. இவர், சென்னை, அண்ணா நகர், 12வது தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில், வீட்டின் கண்ணாடி சேதமடைந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சிவப்பு நிற காரில் வந்த மர்மநபர்கள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, விஷால் சார்பில் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். விஷால் படப்பிடிப்பற்காக வெளியூர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.