மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தற்போது விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள எண்ணூரில் பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது என்ற தகவலை அறிந்ததும் அவரது ரசிகர்கள் அங்கு படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று அங்கு கூடிய விஜய் ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டி அடித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தினால் விஜய் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் கொந்தளிப்படைந்துள்ளார்கள். இதையடுத்து அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய்க்கு எதிராக சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள்.
அதில், ரஜினி அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் எல்லாம் ரசிகர்கள் கூடிவிட்டால் தூரத்தில் நின்றாவது அவர்களைப் பார்த்து கையை அசைத்து சந்தோஷப்படுத்துகிறார்கள். ஆனால் விஜய்யோ நாங்கள் அவரை பார்ப்பதற்காக நீண்ட தூரத்தில் இருந்து வந்து காத்து கிடந்த போதும் தூரத்தில் நின்று கூட எங்களை பார்த்து அவர் கை அசைக்கவில்லை. அப்படி இருக்கும்போது எதற்காக விஜய் படம் வெளியாகும் போது அவருக்கு கட்அவுட் , பேனர் வைத்து நாங்கள் ஆதரவு காட்ட வேண்டும். படக்குழுவினரின் உத்தரவு இல்லாமல் காவல்துறையினர் எங்களை விரட்டி அடிப்பார்களா ? ரசிகனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத விஜய்யை இனிமேல் நாங்கள் பார்க்க சொல்ல மாட்டோம். தளபதி எங்களுக்கு நல்ல பரிசு கொடுத்து விட்டார் என்று பல ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.