ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"இன்றைக்கு எல்லோருமே யதார்த்தமான கதையைத்தான் விரும்புறாங்க. அப்படி இருக்கும்போது எதுக்கு அடுத்தவர் கதைய படமா எடுக்கணும். என் வாழ்க்கையிலேயே சினிமாவுக்கான அத்தனை சம்பவங்களும் நிறைஞ்சிருக்கு. அதான் என்னோட சொந்த வாழ்க்கைய படமா எடுத்துகிட்டிருக்கேன்" என்கிறார் இயக்குனர் இளையதேவன்.
மேலும் அவர் கூறியதாவது: 13 வயசுல வீட்டை விட்டு ஓடிப்போய் திருச்சியில கவிதா ஓட்டல்ல வேலை பார்த்தேன். அதுலேருந்து வாழ்க்கை எங்கெங்கோ திசை மாதிரி இப்போ இயக்குனராயிட்டேன். இந்த இடைப்பட்ட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை கொஞ்சம் கூட கற்பனை கலக்காம எந்த சம்பவம் எங்கு நடத்துச்சோ அந்த இடத்துலேயே படமாக்குறேன். முதல் ஷெட்யூலே நான் வேலை பார்த்த ஓட்டல்லதான். என்னோட கேரக்டர்ல ஜெகா என்ற புதுமுகம் நடிக்கிறார். என்னோட தந்தையா டேனியல் பாலாஜி நடிக்கிறார். அர்ச்சனா கவி, சுஷ்மிதான்னு ரெண்டு பொண்ணுங்க நடிக்கிறாங்க. இந்தப் படம் நிச்சயமா ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும் என்கிறார் இளையதேவன்.