காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
""சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், கேயார் எந்த பதவிக்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன், என, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: தயாரிப்பாளர் சங்க தேர்தலில், நாங்கள், 400 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றோம். கேயார் அணியினர், 300 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தனர். இந்த, 300 பேரில், 204 பேர், எங்களை செயல்பட விடாமல், இடர்பாடு செய்து வருகின்றனர்.ஒரு மாதம் தேடிப் பிடித்து, கேயார் கொண்டு வந்த, இந்த, 204 பேர் தான் எங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஓட்டளித்தனர். இவர்களில், 100 பேர் எங்களிடம் தீபாவளி உதவியாக பட்டு வேட்டி, பட்டு சேலை, 5,000 ரூபாய் பணமும் வாங்கிச் சென்றது, சங்கத்தினருக்கு தெரியும்.அடுத்து நடக்கவுள்ள தேர்தலுக்குள், கேயாரின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்து, கடைசியில், 20 பேர் கூட அவர்கள் அணியில் நிலைக்க மாட்டார்கள்.
சங்கத்திற்கு வங்கிக்கணக்கில், 4 கோடி ரூபாய் உள்ளது. இதனை எடுத்து செலவு செய்யும் நோக்கில் தான், அடுத்த தேர்தல் நடத்தவேண்டும் என, அவசரப்படுத்துகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற என் முடிவை, மாற்றிக் கொண்டுள்ளேன். சங்கத்தின் பொதுக் குழு கூட்டம், ஒரு மாதத்திற்குள் கூட்டப்படும். அதில், சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது குறித்து, பேசி முடிவு செய்யப்படும். தேர்தலில் கேயார் எந்தப் பதவிக்கு நின்றாலும், அந்தப் பதவிக்கு, நான் எதிர்த்து போட்டியிடுவேன். சங்க நிர்வாகத்தின் மூலம், உறுப்பினர்களுக்கு, இதுவரையும், இனி செய்யப் போகிற பணிகளால், வரும் தேர்தலில், நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.
இந்தச் சந்திப்பில், பொருளாளர் கலைப்புலி தாணு, செயலாளர் தேனப்பன் உட்பட, தயாரிப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.