நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு , தற்போது கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்த சிம்பு, இடையே வெந்து தணிந்தது காடு பட வெளியீட்டிற்காக இடைவெளி விட்டிருந்தார்.
இந்த நிலையில், பத்து தல படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெறவுள்ள இந்த அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவுடன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படத்தின் மற்ற நடிகர்களும் பங்கேற்கவுள்ளனர். டிசம்பர் 14ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் புரமோஷனை அடுத்த மாதம் முதல் படக்குழு துவக்க உள்ளது.