ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். கடந்த வருடம் இவரது திடீர் மறைவு இந்திய திரை உலகிற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. மொழி பேதம் பாராமல் அனைத்து திரையுலகையும் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தி வந்தனர். இந்தநிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களுக்கு புனித் ராஜ்குமார் உருவம் பதித்த வெள்ளி நாணயம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ள தகவல் நடிகர் விக்ரம் பிரபு மூலமாக வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து வந்திருந்த கன்னட நிகழ்ச்சி தொகுப்பாளர் அனுஸ்ரீ என்பவர் புனித் ராஜ்குமார் உருவம் பொறித்த வெள்ளி நாணயங்களை பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு பரிசாக வழங்கியுள்ளார். கன்னட திரை உலகம் சார்பாக இந்த பரிசை அனுஸ்ரீ மூலமாக கொடுத்து வழங்க செய்துள்ளார்கள்.
இது பற்றி விக்ரம் பிரபு கூறும்போது "பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சியின்போது கன்னட திரையுலகம் சார்பாக அப்பு அண்ணாவின் உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை கன்னட தொகுப்பாளர் அனுஶ்ரீயும் அவரது குழுவினரும் வழங்கியது மிகப்பெரிய கௌரவமாக அமைந்தது. இதை பெறும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டேன். எவ்வளவு அற்புதமான மனிதர்.. அவரது அன்பு இப்போதும் எங்களுடன் தொடர்கிறது" என்று கூறியுள்ளார்.