மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மஞ்சள் சிவப்பு பச்சை படத்திற்கு பிறகு தமிழில் சித்தார்த் நடித்த படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. சமீபத்தில் தெலுங்கில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த மகாசமுத்திரம் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் என்.ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த படத்தில் கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவு நனவானதாக கூறியுள்ளார் ஆஷிகா.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை கடந்த வருடமே என்னிடம் தொலைபேசியில் கூறினார்கள். படத்தின் கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தாலும் இரண்டு ஹீரோக்கள் கதை என்பதால் அதில் நடிப்பதற்கு சற்று தயங்கி சம்மதம் தெரிவிக்காமல் இருந்தேன். சில மாதங்கள் கழித்து அதே படக்குழுவினர் என்னை அழைத்து இந்தப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் சித்தார்த் ஒரு கதாநாயகனாக நடிக்கிறார் என்றும், அவருக்கு ஜோடியாக நீங்கள் நடிக்கிறீர்கள் என்றும் கூறினார்கள். உடனே மறுயோசனை எதுவும் செய்யாமல் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். காரணம் நான் பள்ளியில் படித்த காலத்தில் சித்தார்த்தின் படங்களை பார்த்து அவரது ரசிகையாகவே மாறியவள். இப்போது அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது கனவு நனவானதாகவே எனக்கு தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்