விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? | 'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது சீதாராமம் படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அடுத்து பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள சுப் படத்தில் நடித்துள்ளார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 23ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. திரைப்படங்களை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களை கொலை செய்து அவர்கள் உடம்பில் ஸ்டார் பதிக்கும் த்ரில்லர் கதை.
மும்பையில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் பேசியதாவது: சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் திரைப்படங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அதுவும் முன்னணி நடிகர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் மிக மோசமான தோல்வியை சந்திக்கின்றன.
என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை பதிவு செய்து வைத்துள்ளேன். அந்த பதிவுகளை பதிவிட்ட ஐடிக்கள் எனக்கு நன்றாக தெரியும். நடிகர் மீதான விமர்சனங்கள் புதிதல்ல. ஆனால் வரம்பு மீறி செல்லும்போது அதை நான் எதிர்க்கிறேன். தனிப்பட்ட முறையில் நடிகர்களை விமர்சிப்பதும், ட்ரோல் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.