மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. சங்கத் தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தியேட்டர்களின் டிக்கெட் விற்பனையை தமிழக அரசு ஆன்லைன் மூலம் கண்காணிக்க வேண்டும்.
* டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்,
* தயாரிப்பாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மானியத் தொகையை ரூ.7 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டும்.
* பையனூர் திரைப்பட நகரில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தரவேண்டும்.
* முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி திரைத்துறை வாரியம்' என்ற பெயரில் வாரியம் அமைக்க வேண்டும்.
* தயாரிப்பாளர் சங்கத்திற்கு சொந்தமாக அலுவலகம் கட்டிக் கொள்ள சென்னையில் இடம் ஒதுக்கித் தரவேண்டும்.
* படம் வெளியான 3 நாட்களுக்கு பிறகே சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வெளியிடப்பட வேண்டும்.
* படம் பார்த்து விட்டு திரும்பும் ரசிகர்களிடம் படம் பற்றி கருத்து கேட்கும் மீடியாக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க கூடாது .
* தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்களுக்கு திரைத்துறையினர் பேட்டி தரக்கூடாது.
* படப்பிடிப்பை அடிக்கடி நிறுத்தி பிரச்சினை செய்யும் லைட்மேன் சங்கத்தை பெப்சி கட்டுப்படுத்த வேண்டும்.
* இனி இரண்டு படங்கள் தயாரித்து அதனை குறைந்தபட்சம் 25 தியேட்டர்களில் வெளியிட்டவர்கள் மட்டுமே சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
* தயாரிப்பளர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
* குறைந்தபட்சம் 2 முறை செயற்குழு உறுப்பினர்களாக பணியாற்றிவர்கள்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும்.
* சங்கத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க தனியாக குழு அமைக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.