திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
சென்னையில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மற்றும் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு ரஜினியும், ஷாருக்கானும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பும், மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படி இருவரும் ஒரே ஸ்டுடியோவில் நடித்து வந்த போதும் இதுவரை அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. என்றாலும் விரைவில் விஜய்யும், மகேஷ் பாபுவும் நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய் தமிழில் நடித்துள்ள கில்லி, போக்கிரி உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.