ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமி சினிமா தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்துகொண்ட சர்ச்சை சோஷியல் மீடியாக்களில் கொடிமழை செடிமழையாக ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும், மஹாலெட்சுமி பணத்துக்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றசாட்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் மஹாலெட்சுமி கூறும்போது, 'என் அப்பாவும் சினிமாவில் தான் இருக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்', 'பொன்னியின் செல்வன்' என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தெலுங்கில் சங்கர் ஐயா என்றால் அனைவருக்கும் தெரியும். நானும் கூட, 3 சீரியல் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறேன். வசதியாக வாழ எங்களிடம் இருக்கும் பணமே போதும். எனது சம்பளம் மட்டும் 3 லட்சம். இது போதாது என்றா நான் பணத்திற்காக இவரை திருமணம் செய்தேன். நிச்சயம் கிடையாது' என நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளார்.