மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா என்கிற படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பலரையும் ஈர்த்து விட்டது. மேலும் பல மாநிலங்களிலிருந்தும் இந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரும் நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்த ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த சேலை போன்றே தற்போது ஜெய்ப்பூர் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது ஸ்ரீவள்ளி சேலைகள் என்றே அவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வட மாநிலத்தில் ஸ்ரீவள்ளி என்கிற பெயரில் சேலைகள் உருவாகும் அளவுக்கு புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ராஷ்மிகா ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.