திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்தது.
முதல் மூன்று நாட்களில் ரூ.250 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. சுமார் 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 700 கோடி வசூலைக் கடந்தால்தான் லாபகரமான படமாக அமையும் என பாலிவுட்டில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், முதல் மூன்று நாள் வசூல் தவிர வார நாட்களில் இப்படத்தின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் 40 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாம்.
இதனால், படம் எதிர்பார்க்கப்பட்ட வசூலைப் பெற முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள். எனவே, படம் நஷ்டத்தை நோக்கி நகர்வதைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்கள். ஓடிடி மற்றும் இதர உரிமைகள் மூலம் தயாரிப்பாளர் பணத்தைத் தேற்றலாம். ஆனால், தியேட்டர் உரிமைகளை வாங்கியவர்களுக்கு சோதனையாக இருக்கும் என்கிறார்கள்.