மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் சில படங்களை எப்போதுமே மறக்க முடியாது. 90களில் வெளிவந்த படங்களில் இப்போதும் பேசப்படும் படங்களில் ஒரு சில படங்கள்தான் இருக்கின்றன. அவற்றில் 1991ல் வெளிவந்த 'சின்னத்தம்பி', 1994ல் வெளிவந்த 'நாட்டாமை' ஆகிய படங்களுக்கு முக்கிய இடமுண்டு.
அற்புதமான குடும்பக் கதையாக வெளிவந்த அந்தப் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளி விழா கொண்டாடின. அந்தப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 'நாட்டாமை' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகவும், 'சின்னத்தம்பி' படத்தில் பிரபுவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் குஷ்பு. இவர்கள் மூவரும் தற்போது விஜய், ராஷ்மிகா நடிக்கும் 'வாரிசு' படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
குஷ்பு அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சரத்குமார், பிரபு ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அந்தக் கால ஞாபகம் வந்திருக்கும். பிரபுவின் தோள் மீது சாய்ந்து ஆனந்தமாக சிரிக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் தனியாகப் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
“காலம் யாவும் பேரின்பம், காணும் நேரம் ஆனந்தம்,” என்ற 'சின்னத்தம்பி - போவோமா ஊர்கோலம்' பாடல் குஷ்புவுக்கு ஞாபகம் வந்திருக்குமோ ?.