திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தமிழ் சினிமாவில் சில படங்களை எப்போதுமே மறக்க முடியாது. 90களில் வெளிவந்த படங்களில் இப்போதும் பேசப்படும் படங்களில் ஒரு சில படங்கள்தான் இருக்கின்றன. அவற்றில் 1991ல் வெளிவந்த 'சின்னத்தம்பி', 1994ல் வெளிவந்த 'நாட்டாமை' ஆகிய படங்களுக்கு முக்கிய இடமுண்டு.
அற்புதமான குடும்பக் கதையாக வெளிவந்த அந்தப் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளி விழா கொண்டாடின. அந்தப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 'நாட்டாமை' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகவும், 'சின்னத்தம்பி' படத்தில் பிரபுவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் குஷ்பு. இவர்கள் மூவரும் தற்போது விஜய், ராஷ்மிகா நடிக்கும் 'வாரிசு' படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
குஷ்பு அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சரத்குமார், பிரபு ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அந்தக் கால ஞாபகம் வந்திருக்கும். பிரபுவின் தோள் மீது சாய்ந்து ஆனந்தமாக சிரிக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் தனியாகப் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
“காலம் யாவும் பேரின்பம், காணும் நேரம் ஆனந்தம்,” என்ற 'சின்னத்தம்பி - போவோமா ஊர்கோலம்' பாடல் குஷ்புவுக்கு ஞாபகம் வந்திருக்குமோ ?.