நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் சில படங்களை எப்போதுமே மறக்க முடியாது. 90களில் வெளிவந்த படங்களில் இப்போதும் பேசப்படும் படங்களில் ஒரு சில படங்கள்தான் இருக்கின்றன. அவற்றில் 1991ல் வெளிவந்த 'சின்னத்தம்பி', 1994ல் வெளிவந்த 'நாட்டாமை' ஆகிய படங்களுக்கு முக்கிய இடமுண்டு.
அற்புதமான குடும்பக் கதையாக வெளிவந்த அந்தப் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளி விழா கொண்டாடின. அந்தப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 'நாட்டாமை' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகவும், 'சின்னத்தம்பி' படத்தில் பிரபுவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் குஷ்பு. இவர்கள் மூவரும் தற்போது விஜய், ராஷ்மிகா நடிக்கும் 'வாரிசு' படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
குஷ்பு அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சரத்குமார், பிரபு ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அந்தக் கால ஞாபகம் வந்திருக்கும். பிரபுவின் தோள் மீது சாய்ந்து ஆனந்தமாக சிரிக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் தனியாகப் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
“காலம் யாவும் பேரின்பம், காணும் நேரம் ஆனந்தம்,” என்ற 'சின்னத்தம்பி - போவோமா ஊர்கோலம்' பாடல் குஷ்புவுக்கு ஞாபகம் வந்திருக்குமோ ?.