திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் உள்ளத்தை அள்ளித்தா. வருகிற அக்டோபர் 10ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கெனவே முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஜமீலா என்ற தொடரை அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த தொடர் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்ணை பற்றிய தொடராக ஒளிபரப்பாக இருக்கறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் ஆட்டோ ஓட்டி, ஆட்டோ ராணி என்ற பெயரெடுத்துக் கொண்டு ஒரு பெண் எப்படி தன் குடும்பத்தை தனியொருத்தியாக நின்ற காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை களம் என்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் வேகமாக கொண்டு சேர்த்து பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாத கேரக்டராக ஆட்டோ ராணி கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தொடராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.