ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் உள்ளத்தை அள்ளித்தா. வருகிற அக்டோபர் 10ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கெனவே முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஜமீலா என்ற தொடரை அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த தொடர் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்ணை பற்றிய தொடராக ஒளிபரப்பாக இருக்கறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் ஆட்டோ ஓட்டி, ஆட்டோ ராணி என்ற பெயரெடுத்துக் கொண்டு ஒரு பெண் எப்படி தன் குடும்பத்தை தனியொருத்தியாக நின்ற காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை களம் என்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் வேகமாக கொண்டு சேர்த்து பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாத கேரக்டராக ஆட்டோ ராணி கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தொடராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.