ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
அமைதிப்படை 2, கண்களும் கவி பாடுதே தற்போது உருவாகி வரும் பிஸ்தா, மணியார் குடும்பம் ஆகிய படங்களில் நடித்து வருபவர் மலையாள நடிகை மிருதுளா முரளி. தற்போது தெருநாய்கள் குறித்த பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மிருதுளா. சமீபத்தில் கேரள அரசு தெருவில் திரியும் வெறி பிடித்த நாய்களை கொல்வதற்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கும் செய்தி வெளியானது.
இதை கேள்விப்பட்டதும் கொந்தளித்துப்போன மிருதுளா முரளி, “பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரையும் கொன்று விடுகிறோமா என்ன? அவர்களுக்கு ஜெயில் என்கிற ஒரு இடத்தை கொடுத்து பாதுகாக்க தானே செய்கிறோம். அதேபோன்று இந்த வாயில்லா பிராணிகளை எதற்காக கொல்ல வேண்டும்? அவைகளுக்கு என தனியாக ஒரு தங்குமிடத்தை ஒதுக்கி அவற்றை பராமரிப்பதை விட்டுவிட்டு, கொல்வதற்காக அனுமதி கேட்பது மனிதாபிமானமற்ற செயல்” என்று விமர்சித்துள்ளார். மிருதுளாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.