மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
வருகிற 16ம் தேதியை தேசிய சினிமா தினமாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அறிவித்திருந்தது. அந்த நாளில் சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் என கூறியிருந்தனர். மக்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும், அவர்கள் தியேட்டர் அனுபவத்தை உணர வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தேசிய சினிமா தினம் வருகிற 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் நிஜமான காரணம் அதுவல்ல. வருகிற 16ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேபோல் ஹிந்தியில் ரன்பீர் கபூர் , அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரா திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.