ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வருகிற 16ம் தேதியை தேசிய சினிமா தினமாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அறிவித்திருந்தது. அந்த நாளில் சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் என கூறியிருந்தனர். மக்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும், அவர்கள் தியேட்டர் அனுபவத்தை உணர வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தேசிய சினிமா தினம் வருகிற 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் நிஜமான காரணம் அதுவல்ல. வருகிற 16ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேபோல் ஹிந்தியில் ரன்பீர் கபூர் , அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரா திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.