பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ்த் திரையுலகத்தின் நீண்ட நாளைய காதல் ஜோடிகளான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் சென்ற வெளிநாட்டு சுற்றுப் பயண புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளைப் போடும் வழக்கத்தை உடைய விக்னேஷ் சிவன் முதல் முறையாக மருமகனாக தனது மாமியாருக்கு, அதாவது நயன்தாராவின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“அன்புள்ள ஓமனா குரியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எனது மற்றொரு அம்மா. நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண், எப்போதும் அழகான இதயத்துடன் தூய்மையான ஆன்மாவைப் பார்க்கிறேன். நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி, ஆசீர்வாதங்களுடன் இருக்க வேண்டுமென கடவுளைப் பிரார்த்திக்கிறேன்,” என வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.