விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பின் தனுஷ் நடிப்பில் அடுத்து, ‛நானே வருவேன்' படம் வெளியாக உள்ளது. அண்ணன் செல்வராகவன் இயக்கி உள்ள இந்த படம் இம்மாதம் ரிலீஸாக உள்ளது. அதைத்தொடர்ந்து வாத்தி படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கு பின் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிப்பார் என தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது தனுஷின் ‛நானே வருவேன்' படம் இறுதிக்கட்டத்தில் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறது. இதனால் இந்த படத்தை அடுத்தமாதம் துவங்க உள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலை பிரதேசம் மற்றும் காடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.