இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, உருவாகும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகும் இதன் முதல் பாகம் வருகின்ற 30ம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பெண்களை கவரும் விதமாக தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டருடன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு ஆகியோரின் உருவமும் இடம்பெற்றுள்ளது. புடவை முழுவதும் போர் வாள் இடம்பெற்றுள்ளது. இது பொன்னியின் செல்வன் படத்திற்கான ப்ரமோஷன் பணியில் ஒரு பகுதிதான் என்றாலும் இது எந்த அளவிற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பது பின்னர் தான் தெரியவரும்.