திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். தற்போது அவர் மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தார்
படங்களில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். தற்போது அவர் துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் பயிற்சி அளித்து வருகிறார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ‛‛எதிர்பாராத விஷயங்கள் நடந்தால் நிச்சயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வார இறுதியில் நான் திருச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டேன். தேசிய துப்பாக்கி சுடும் வீரர் ராஜசேகர பாண்டியன் எனக்கு ஊக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி. எனக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததற்கும் எனக்கு சில முறைகளை கற்பிப்பித்த அவருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி எனக்கு ஒரு அற்புதமான அனுபவம். இப்போது நான் ரைபிள் கிளப்பின் கவுரவ உறுப்பினர் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. திருச்சியை அடுத்து சென்னையிலும் எனது துப்பாக்கிச்சூடு பயிற்சி தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.