நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'லைகர்' படம் எதிர்பாராத விதமாக படுதோல்வியைத் தழுவியது. மற்ற மொழிகளில் அப்படியிருந்தாலும் தெலுங்கில் மட்டுமாவது தப்பிக்காதா என எதிர்பார்த்தார்கள். விஜய் தேவரகொண்டாவின் முந்தைய சில மோசமான படங்களை விடவும் இந்தப் படம் மோசமாக வசூலித்தது. சீக்கிரமே தியேட்டர்களை விட்டும் தூக்கப்பட்டது.
படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்கள் நஷ்டத் தொகையைக் கேட்டு வருகிறார்களாம். ஆனால், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக சார்மி கவுர் தர மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தை சந்தித்து தங்கள் பிரச்சினையை வினியோகஸ்தர்கள் பேச உள்ளார்களாம். அதிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் தெலுங்கு சேம்பரில் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.