ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னத்தின் கடல் படத்தில், இயேசு பிரான் படத்தை உடைப்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி அப்படத்தை தடை செய்ய இந்திய கிறிஸ்தவ ஜனநாய கட்சியினர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். தங்களது மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படம் சமீபத்தில் ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் பல காட்சிகள் கிறிஸ்தவர்களை புண்படுத்தும்படி படமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பைபிள் கல்லூரியில் படிக்க வரும் அரவிந்த்சாமியிடம், அர்ஜூன் இயேசுவுக்கு தம்பி சாத்தான் என்று கூறியிருக்கிறார். மேலும் அர்ஜூன் அடிக்கடி தன்னை சாத்தான் என்று கூறுகிறார். ஆனால் அவரது பெயரோ பெர்க்மான்ஸ், இந்தப்பெயர் கிறிஸ்தவ பாடகரின் பெயர். அதேப்போல் படத்தின் நாயகன் இயேசு படத்தை போட்டு உடைப்பதும், அவர் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து தனது கையில் படிந்து இருக்கும் ரத்தம் இயேசுவின் ரத்தம் என்று கூறுகிறார். இப்படி பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க வேண்டும். கிறிஸ்தவர்களை புண்படும்படி படம் எடுத்த மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.