நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பாடகி சின்மயி பாடலை தாண்டி அறியப்பட்டவர். துணிச்சலான கருத்துக்களை கூறக்கூடியவர். எவருக்கும் அஞ்சாமல் நியாயத்தை பேசுகிறவர் என்கிற இமேஜ் அவருக்கு உண்டு. அவர் அடிப்படையில் ஒரு டப்பிங் கலைஞரும்கூட. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவரை நீக்க பெரிய பெரிய ஆட்கள் முயற்சித்தபோதும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீடித்து வருகிறார்.
சின்மயி முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் பேசி வருகிறார். அவற்றில் முக்கியமானவர் சமந்தா. தற்போது நன்றாக தெலுங்கு பேச கற்றுக் கொண்ட சமந்த தனது தெலுங்கு படங்களுக்கு தானே பேசி வருகிறார். இதனால் சமந்தாவுடன் ஆன டப்பிங் பயணம் முடிவுக்கு வருவதாக சின்மயி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கேரக்டர்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது. என்று தெரிவித்துள்ளார்.