டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாடகி சின்மயி பாடலை தாண்டி அறியப்பட்டவர். துணிச்சலான கருத்துக்களை கூறக்கூடியவர். எவருக்கும் அஞ்சாமல் நியாயத்தை பேசுகிறவர் என்கிற இமேஜ் அவருக்கு உண்டு. அவர் அடிப்படையில் ஒரு டப்பிங் கலைஞரும்கூட. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவரை நீக்க பெரிய பெரிய ஆட்கள் முயற்சித்தபோதும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீடித்து வருகிறார்.
சின்மயி முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் பேசி வருகிறார். அவற்றில் முக்கியமானவர் சமந்தா. தற்போது நன்றாக தெலுங்கு பேச கற்றுக் கொண்ட சமந்த தனது தெலுங்கு படங்களுக்கு தானே பேசி வருகிறார். இதனால் சமந்தாவுடன் ஆன டப்பிங் பயணம் முடிவுக்கு வருவதாக சின்மயி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கேரக்டர்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது. என்று தெரிவித்துள்ளார்.