பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான ஜோடியாக ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நாகார்ஜுனா, அமலா. ஒன்றாக சேர்ந்து நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள். நாகார்ஜுனா இன்னமும் பிஸியான ஹீரோவாக நடித்து வருகிறார். அமலா திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.
30 வருடங்களுக்குப் பிறகு அவர் தமிழில் நடித்துள்ள 'கணம்' படம் தமிழிலும் தெலுங்கிலும் நாளை மறுநாள் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. அதே தினத்தில் ஹிந்தியில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' படமும் வெளியாகிறது. இருவருக்குமே அன்றைய தினம் முக்கியமான நாளாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிப்பதால் அமலா அப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரே நாளில் தனது பெற்றோர் நடிக்கும் படம் வெளியாவது குறித்து அவர்களது மகன் அகிலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற 'கணம்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஒகே ஒக ஜீவிதம்' படத்தின் செலிபிரிட்டி ஷோவில் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகியோர் ஒன்றாக படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.