நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பூரி ஜெகன்னாத், விஜய் தேவரகொண்டா கூட்டணியில் வெளிவந்த 'லைகர்' படம் அனைத்து மொழிகளிலும் படுதோல்வியைத் தழுவியது. வெளியீட்டிற்கு முன்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். விஜய், அனன்யா இருவரும் ஊர் ஊராகச் சென்று படத்தைப் பற்றி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். ஆனால், படம் வெளியான பின்பு கதையே இல்லாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது.
இப்படத்தின் தோல்வி பூரி ஜெகன்னாத், விஜய் கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் 'ஜனகனமண' படத்தையும் பாதித்துள்ளது. இப்படத்தை 'லைகர்' வெளியீட்டிற்கு முன்பாகவே ஆரம்பித்தார்கள். கதாநாயகியாக 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 3ம் தேதி படம் வெளியீடு என்று கூட அறிவித்தார்கள்.
இந்நிலையில் பூரி ஜெகன்னாத்தும், விஜய் தேவரகொண்டாவும் கலந்து பேசி இப்படத்தை டிராப் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்காலிக டிராப்பா, நிரந்தர டிராப்பா என்பது பின்னர் தெரிய வரும்.