இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்து 2006ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வேட்டையாடு விளையாடு'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கவுதம் மேனன் பல பேட்டிகளில் கூறி உள்ளார். சமீபத்தில் கூட படத்தின் 60 சதவீத கதை பணி முடிந்துவிட்டதாக கூறி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது பேசிய கமல், ‛வேட்டையாடு விளையாடு 2' படத்தின் திரைக்கதையை என்னிடம் தருவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவுதம் மேனன் கூறினார். ஆனால் இன்னும் வரவில்லை என கவுதமிடம் கேட்டார்.
அதற்கு, ‛‛எழுத்தாளர் ஜெயமோகன் தான் ‛வேட்டையாடு விளையாடு 2' படத்தின் திரைக்கதையை எழுதி வருகிறார், சீக்கிரம் வரும் சார் என்றார் கவுதம் மேனன். இதை வைத்து பார்க்கையில் விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.