ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. 1950ம் ஆண்டு "சவுகார்" என்ற தெலுங்கு படத்தில் என்.டி.ராமராவுக்கு ஜோடியாக நடித்ததால் சவுகார் ஜானகி ஆனார். "ஒளிவிளக்கு" படத்தில் எம்.ஜி.ஆருடனும், "புதிய பறவை" படத்தில் சிவாஜியுடனும், இரு கோடுகள் படத்திலி ஜெமினியுடனும் நடித்து புகழ் பெற்றார். இந்திய மொழிகளில் சுமார் 385 படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழில் கடைசியாக நடித்தது 1999ல் அஜித் நடிப்பில் வெளிவந்த "தொடரும்" படம் தான். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகிய சவுகார் ஜானகி. அமெரிக்காவில் தன் மகள் வீட்டில் குடியேறினார். அதன்பிறகு புட்பர்த்தி சாய்பாபா பக்தையாகி பாபாவின் ஆசிரமத்திலேயே வாழ்ந்தார்.
பாபாவின் மறைவுக்கு பிறகு அங்கிருந்து வெளியே வந்த சவுகார் ஜானகி சென்னையில் உள்ள இன்னொரு மகள் வீட்டில் வசித்தார். இப்போது அவர் 14 வருடங்களுக்கு பிறகு வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் விஷ்னுவர்த்தனின் தம்பி கிருஷ்ணா நடித்து வரும் இந்தப் படத்தில் அவரின் பாட்டியாக நடிக்கிறார். கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மோனல் கஜார் நடிக்கிறார். ராஜமோகன் இயக்குகிறார். 81 வயதாகும் சவுகார் ஜானகி இப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து சாப்பிடுகிறார்.