தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 மற்றும் கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. தனுசை பிரியப்போவதாக அறிவித்த பிறகு ஹிந்தி படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினி, கோவில்களில் வழிபாடு நடத்தும் வீடியோக்கள் மற்றும் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நேரத்தில் தற்போது சில கோப்புகள் அடங்கிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு பேனாவைக் கொண்டு கதை எழுதுவது ஒருவித உணர்வு. முதன்முதலாக கதையை எழுதிவிட்டு இரண்டாவதாக தட்டச்சு செய்யும்போது சில மாற்றங்களை செய்வது வழக்கமானதாகும். காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும் போது அதில் இருந்து ஒரு பேப்பரைக் கூட தூக்கி எறிய மனம் வராது. ஒவ்வொரு முறையும் நீங்கள் படிக்கும் போது அதில் ஏதாவது புதிய சிந்தனை வரலாம். அதனை அப்டேட் செய்து கொண்டிருக்கவே விரும்புவோம் என்று பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.