நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். 'பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன்' என கடந்த 15 வருடங்களில் ஐந்தே ஐந்து படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான வாழ்வியலை, பதிவைச் சொன்ன படங்கள். அதனாலேயே அவருக்கு சினிமாவைக் காதலிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார். சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்க இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.
இன்று வெற்றிமாறன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி அவருடைய வாழ்த்தில், “மக்கள் வாழ்வியல் பேசும் உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் மாபெரும் படைப்பாளி, அறம் போற்றும் விவசாயி, கடும் உழைப்பாளி அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு நாயகன் விஜய் சேதுபதி, படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளுடன், படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.