படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். 'பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன்' என கடந்த 15 வருடங்களில் ஐந்தே ஐந்து படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான வாழ்வியலை, பதிவைச் சொன்ன படங்கள். அதனாலேயே அவருக்கு சினிமாவைக் காதலிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார். சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்க இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.
இன்று வெற்றிமாறன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி அவருடைய வாழ்த்தில், “மக்கள் வாழ்வியல் பேசும் உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் மாபெரும் படைப்பாளி, அறம் போற்றும் விவசாயி, கடும் உழைப்பாளி அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு நாயகன் விஜய் சேதுபதி, படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளுடன், படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.