நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் விஜய்சேதுபதி தமிழை தொடர்ந்து தெலுங்கில் நுழைந்து சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, உப்பென்னா ஆகிய படங்களில் நடித்து அங்கேயும் வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து ஹிந்தியிலும் கால்பதித்து படங்களில் நடித்து வருகிறார். அதேபோல மூன்று வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படம் மூலம் மலையாளத்திலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. ஜெயராம் இன்னொரு கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ரெஜிஷ் மிதிலா என்பவர் இயக்கியிருந்தார்.
அந்த படம் பெரிய அளவில் போகவில்லை என்றாலும் விஜய்சேதுபதியை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் என்கிற பெயர் அவருக்கு கிடைத்தது. தற்போது அந்த அறிமுகத்தை பயன்படுத்தி தமிழில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார் ரெஜிஷ் மிதிலா. தமிழில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் யானை முகத்தான் என்கிற படத்தை இயக்குகிறார் ரெஜிஷ் மிதிலா. இந்த படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.