நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான குமுதினி என்பவர் தற்போது சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த குமுதினி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நடிகர் பிரசாத் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் பிரசாந்த், தன்னிடம் 10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் தரப்பில் இருந்து குமுதினிக்கு மூன்று முறை பிரச்சனை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த புகார்கள் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரசாந்த்தும் அந்த பெண் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இரண்டு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.